ஆரணி அருகே ஹவுசிங் போர்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

ஆரணி அருகே ஹவுசிங் போர்டில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
ஆரணி அருகே ஹவுசிங் போர்டில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இம்முகாமில் ஆரணி கோட்டாட்சியர் சி.சிவா தலைமை தாங்கினார். ஆரணி ஒன்றிய செயலாளர் துரைமாமது அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீர்வு பெற்ற மனுக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் முள்ளிப்பட்டு, மலையாம்பட்டு, புங்கம்பாடி ஆகிய ஊராட்சிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இம்முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாமில் மனுக்களை கொடுத்து உடனடி தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனர். இதில் மக்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மனு அளித்த உடனே தீர்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை எரிசக்தி துறை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை குருசாமி மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கலைஞர் உரிமைத்தொகை உள்ளிட்ட 13 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இங்கு மனு கொடுத்தால் உடனடியாக வழங்க ஆவணம் செய்யப்படும். என்று ஆரணி கோட்டாட்சியர் தெரிவித்தார். ஆரணி வட்டாட்சியர் கௌரி முன்னிலை வகித்தார். மேலும் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, நகரசெயலாளர் மணிமாறன், ஒன்றியசெயலாளர்கள் மோகன், சுந்தர், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலர் கோவர்த்தனன், முள்ளிப்பட்டு ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story