தேனி அருகே நெஞ்சுவலி காரணமாக இளைஞர் உயிரிழப்பு

X
தேனி நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை (33) பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற இவர் உடல்நிலை சரி இல்லை என வீடு திரும்பி உள்ளார். அன்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு (செப்.30) பதிவு.
Next Story

