குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி

X
தருமபுரி கேரள சமாஜத்தின் 24 ம் ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா விஜயதசமி தினமான இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பகவதி கோயில் மேல்சாந்தி பகவதி சவாமி நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதி ஆசீர்வாதம் செய்த பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசீர்வாதம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து அறிவித்தல் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேரள சமாஜ சங்க தலைவர் கிருஷ்ணன் உன்னி, செயலாளர் ஹரிகுமார், பொருளாளர் சத்ய நாராயணன் உள்ளிட்ட சமாஜ உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Next Story

