விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

X
கூடலூர் தெற்கு காவல்துறையினர் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.3) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூடலூர் வாரச்சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த விமல் (26) என்பவரை சோதனை செய்த பொழுது அவர் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் விமல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

