யூடியூபர் மாரிதாஸ் கைது - கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை

X
சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சென்னை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். முன்னதாக மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன - மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (38), தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் (36), அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரத்குமார் (32), யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டோரை சென்னை போலீஸார் கைது செய்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் மாரிதாஸும் இணைந்துள்ளார்.
Next Story

