கரைமேடு பகுதியில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வடமாநில ஓட்டுநர் உயிரிழப்பு.
கரைமேடு பகுதியில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வடமாநில ஓட்டுநர் உயிரிழப்பு. உத்தரபிரதேஷ மாநிலம் உன்னவ் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் குமார் வயது 33.ஓட்டுநர். என் டி சி லாஜிஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த திலீப் குமார் வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரைமேடு பகுதியில் உள்ள ஜே எஸ் டபிள்யூ காற்றாலை நிறுவனத்தின் அலுவலக இடத்திற்கு தனது லாரியில் காற்றாலை மின்சாரம் தயாரிக்க தேவையான உதிரி பாகங்களை ஏற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு இடுப்பு பகுதியில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை தென்னிலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு அவரை மீண்டும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த திலீப் குமாரின் உறவினர் ராகுல் வயது 22 என்பவர் அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story





