கோவையில் கனமழை – சாலைகளில் வெள்ளப்பெருக்கு, வாகன ஓட்டிகள் அவதி !

கோவையில் கனமழை – சாலைகளில் வெள்ளப்பெருக்கு, வாகன ஓட்டிகள் அவதி !
X
கோவை நகரில் வெள்ளப்பெருக்கு – வாகன ஓட்டிகள் பாதிப்பு.
கோவை மாநகரின் காந்திபுரம், 100 அடி சாலை, சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், வடவள்ளி, தொண்டாமுத்தூர் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். காலை முதல் வெயில் சூடாக இருந்த நிலையில் மாலை நேர மழையால் நகரம் முழுவதும் குளிர்ச்சி நிலவுகிறது.
Next Story