எம்ஜிஆர் சிலை சேதம் . பரபரப்பு

மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலை சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அருகே அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலை ஜல்லிக்கட்டு நடைபெறும் சாலையில் இருந்த எம்ஜிஆர் சிலை மர்ம நபர்களால் சேதமடைந்தது. எம்ஜிஆர் கீழே விழுந்து கிடந்தது. இதனை இன்று (அக்.6) காலை கண்ட அப்பகுதி அதிமுகவினர் திரண்டனர். இதுகுறித்து செய்தி அறிந்த அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story