காமக்காபட்டி- நடந்து சென்றவர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் மூதாட்டி உயிரிழப்பு.
காமக்காபட்டி- நடந்து சென்றவர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் மூதாட்டி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஆலமரத்துப்பட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சுப்பம்மாள் வயது 81. ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9:15 மணி அளவில் மதுரை- கரூர் சாலையில் காமகபட்டி எதிரே உள்ள குறுக்கு வெட்டு சாலையில் சுப்பம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு கார் நடந்து சென்ற சுப்பம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story




