சூலூரில் பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை – மிளகாய் பொடி தூவி தப்பிய மர்ம நபர்கள் !
கோவை மாவட்டம் சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி திருநகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவசாமி, குடும்பத்துடன் வெளிநகரம் சென்றிருந்தார். இதைத் தவறாக பயன்படுத்திய மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் வைத்திருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். பின்னர் வீட்டுக்குள் மிளகாய் பொடி தூவி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிவசாமி அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story




