புளுதியூரில் கால்நடை விற்பனை ஜோர்

புளுதியூர் வாரசந்தையில் 38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
புளுதியூர் வாரசந்தையில் புதன்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக வார சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்க, வாங்க விவசாயிகள் வியாபாரிகள் வந்திருந்தனர் மாடுகள் ரகத்தை பொறுத்து ரூ.6000 - ரூ.29000 வரையும் ஆடுகள் ரூ.5000 -ரூ.10,200 வரையும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - ரூ.1200 வரை என 38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story