கோவை ஆனைகட்டியில் வனவிலங்கு வாரம் விழிப்புணர்வு பேரணி !

X
வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு கோவை ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மனித–மிருக மோதலைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், “என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது” எனும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பறவைகள் மற்றும் வனவிலங்கு ஆய்வாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆனைகட்டி பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் செய்து தனியார் மருத்துவமனை அருகே நிறைவு பெற்றது.
Next Story

