தேனி கம்பம் அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

X
கம்பம் அருகே அனைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா (52). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்தையா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் நேற்று (அக்.8) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

