தாராபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது

X
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ளது வடக்கு மின்வாரிய அலுவலகம் இங்கு வணிக ஆய்வாளராக பணியில் இருப்பவர் ஜெயக்குமார் 56, இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ராமசாமி மகன் சிவசுப்பிரமணியம் என்பவர் தங்களுக்கு சொந்தமான குடியிருக்கும் வீட்டிற்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பம் அளித்திருந்தார் இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்திய தாராபுரம் வடக்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜெயக்குமார் நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு 3500 லஞ்சமாக கேட்டுள்ளார் இதுகுறித்து சிவசுப்பிரமணியம் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர் இதை சிவசுப்பிரமணியம் ஜெயக்குமாரிடம் நேரில் சென்று கொடுத்த போது மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக வணிக ஆய்வாளர் ஜெயக்குமாரை கைது செய்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி அவரது அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது கணக்கில் வராத 13000 அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் கைப்பற்றினர், சம்பவத்தால் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story

