பிரபல பிரியாணி கடை உரிமையாளர் காவல் நிலையம் முன்பு தற்கொலை

X
தூத்துக்குடி, முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்தவர் ஜெகன் என்ற சுவிசேஷராஜ் (42) வயதான இவர் தூத்துக்குடி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கக்கட்டி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி பிரபலமானவர். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் பூத்துகளுக்கு பிரியாணி சப்ளை செய்வதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து டூவிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மற்றும் ஸ்பிக் நகரில் இரண்டு இடங்களில் பிரியாணி கடை தொடங்கி கார் வீடு வாங்கி புகழ்பெற்று இருந்தார், இவரது தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதால் அனைத்து கடைகளையும் மூடிவிட்டு கடைசியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலை லெவிஞ்சிபுரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் தனது உறவினர்களிடம் ஏற்பட்ட தகராறு சண்டை காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினை குறித்து அளித்த புகாரின் பேரில் கடந்த 4 ம் தேதி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், சுவிசேஷராஜ் தான் நடத்தி வந்த ஹோட்டல் நஷ்டம் அடைந்த நிலையிலும், குடும்ப பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்து வந்து மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மனைவி கணவருடன் தகராறு செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு சுவிசேஷராஜ் முத்தையாபுரம் காவல் நிலையம் சென்று தனது உறவினர் தனது பைக் மற்றும் செல்போனை உடைத்து விட்டதாக கூறி, அதற்காக புதிதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அவர் மது போதையில் இருந்ததால் காலையில் காவல் நிலையம் வரும்படி போலீசார் கூறியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் காவல் நிலையம் அருகே திருச்செந்தூர் சாலையில் நின்றவர் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி திடிரென தீ குளித்துள்ளார். பின்னர் உடலில் ஏற்பட்ட தீ காயம் தாங்க முடியாமல் அலறி காவல் நிலையம் உள்ளே சென்ற அவரை முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் தீயை அணைத்து அவரை மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக சிகிச்சை உயிரிழந்தார். தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

