வேதாச்சலபுரத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் எலிவிஷம் உட்கொண்டு தற்கொலை செய்த வாலிபர்.

வேதாச்சலபுரத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் எலிவிஷம் உட்கொண்டு தற்கொலை செய்த வாலிபர்.
வேதாச்சலபுரத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் எலிவிஷம் உட்கொண்டு தற்கொலை செய்த வாலிபர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வேதாச்சலபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா வயது 35.இவரது மனைவி வினிதா வயது 29. இருவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது கருப்பையா தனது தேவைக்காக அதிகப்படியான கடனை வாங்கி யுள்ளார். அதே சமயம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த கருப்பையா ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் எலிவிசம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த கருப்பையா வியாழக்கிழமை அன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த கருப்பையாவின் மனைவி வினிதா அளித்த புகாரில் தோகைமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story