ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 65 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி கூத்தப்பாடி அருகே உள்ள ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து நேற்று இரவு வினாடிக்கு 28,000 கனஅடியாக இருந்தது. பருவமழையால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதால் தற்போது ஒகேனக்கல் ஆற்றில் 65,000 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று அக்.11, காலை 7 மணி நிலவரப்படி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Next Story