வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகே டூவீலர்கள் மோதல். பெண் படுகாயம்.

வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகே டூவீலர்கள் மோதல். பெண் படுகாயம்.
வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகே டூவீலர்கள் மோதல். பெண் படுகாயம். கரூர் மாவட்டம் வெங்கமேடு விபிஜி நகர் அருகே உள்ள கலைஞர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மருதநாயகம் மனைவி சுமதி வயது 55. இவரது சகோதரர் சண்முகசுந்தரம் என்பவர் உடன் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் கரூர் - வெண்ணமலை சாலையில் டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகே சென்ற போது அதே சாலையில் கரூர் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் சுமதி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமதிக்கு தலை கை கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுமதியின் மற்றொரு சகோதரர் முருகன் வயது 52 என்பவர் அளித்த புகாரில் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விஜயகுமார் மீது வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story