வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கிய போலீசார்.

மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இனிப்புகளை வழங்கினார்கள்
மதுரை மாநகர். காளவாசல் பகுதியில் இன்று (அக்.11)போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி, தலைக்கவசம், சீட் பெல்ட், அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மதுரை மாநகர் காவல் துறையுடன் சூரியன் FM இணைந்து இனிப்புகள் வழங்கினர்கள். இந்நிகழ்வில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,சார்பு ஆய்வாளர் சந்தனகுமார்,, சூரியன் FM நிறுவனத்தின் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story