விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
தர்மபுரியில், விபத்தில்லா தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று சனிக்கிழமை நடந்தது. தர்மபுரி மாவட்ட தீயணைப்பத்துறை அலுவலர் அம்பிகா விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி தீயணைப்பு நிலையத்தில் தொடங்கி, ராஜாஜிநகர், இலக்கியம்பட்டி, வழியாக சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையில் பதாதைகள் ஏந்தி ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story




