ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி பரபரப்பு

X
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சேர்ந்த ஊத்தண்ட ராமன் என்ற வாலிபரை முறப்பநாடு காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூத்தண்ட ராமனின் தாய் சரஸ்வதி உடலில் கேனில் கொண்டு வந்த டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் கோமு இவரது மனைவி சரஸ்வதி இவர்களின் மகன் ஊத்தண்ட ராமன் கூலி வேலை செய்து வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்துள்ளது இந்நிலையில் முறப்பநாடு காவல் துறையினர் உத்தண்ட ராமன் மீது அடிக்கடி பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறப்பநாடு காவல்துறையினர் ஊத்தண்டராமனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்துள்ளனர் இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்த உத்தன்ட ராமனின் தாயார் சரஸ்வதி தனது மகனை காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு தொடர்ந்து கைது செய்து சித்திரவதை செய்து வருவதாகவும் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்ய இருப்பதாகவும் எனவே காவல் துறையினர் இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் தனது மகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தான் கேனில் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த கொண்டு வந்த டீசலை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் இதை தொடர்ந்து அங்கே பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரிடம் இருந்து டீசல் கேனை மீட்டு உடலில் தண்ணீர் ஊற்றினர் இதைத்தொடர்ந்து அவருடன் வந்த வழக்கறிஞர்களுடன் காவல் துறையினர் நீங்கள்தான் அவரை உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு தூண்டினீர்களா என காவல்துறையினர் கேட்டனர் இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதை அடுத்து காவல்துறையினர் சரஸ்வதியை மாவட்ட ஆட்சியரிடம் தனது புகாரை தெரிவிக்க அழைத்துச் சென்றனர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையை கண்டித்து பெண் ஒருவர் உடலில் டீசலை ஊற்றி தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story

