இடையபட்டியில் நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாதா வாகனம் மோதி உயிரிழப்பு.

இடையபட்டியில் நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாதா வாகனம் மோதி உயிரிழப்பு.
இடையபட்டியில் நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாதா வாகனம் மோதி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மேற்கு இடையப்பட்டி அருகே உள்ள கிழக்கு அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 35. இவர் சனிக்கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் இடைப்பட்டியிலிருந்து கடவூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று சுரேஷ் குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் பின்னந் தலையில் பலத்த காயம்பட்ட சுரேஷ்குமாரை மீட்டு அருகில் உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுரேஷ்குமாரின் மனைவி லீலா ராணி வயது 25 என்பவர் அளித்த புகாரில் பாலவிடுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story