ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர் சரிவு
தர்மபுரி மாவட்டம் கூத்தப்பாடி ஊராட்சி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழிந்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று இரவு 24,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று அக்டோபர் 14 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 20,000 கன அடியாக நீர் வரத்து சரிந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது
Next Story