புனித ஞானப்பிறகாசியார் ஆலய வளாகத்தில் ரத்த தானம்

X
குமரி மாவட்டம் , காரங்காடு வட்டாரம், காரங்காடு புனித ஞானப்பிறகாசியார் ஆலய வளாகத்தில் குருதிக்கொடை தினம் நடந்தது. குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமை வகித்தார். காரங்காடு வட்டார மேய்ப்புப்பணி பேரவை துணைத் தலைவர் ஹரிதாஸ் வரவேற்றார். செயலாளர் ஜோஸ்பின் அமுதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் ராகேஷ் ரத்ததானம் குறித்து பேசினார். முகாமில் மாங்குழி பங்கு பணி சகாய ஜெரால்டு எபின், இணை பங்கு பணி ரீகன், மைலோடு இணை பங்கு பணி டேனியல், காரங்காடு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் கட்டிமாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பெலிக்ஸ்ராஜன் உட்பட இளைஞர்கள் இளம்பெண்கள் என 25-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். காரங்காடு வட்டார மேய்ப்புப்பணி பேரவை பொருளாளர் ஜஸ்டின் தாஸ் நன்றி கூறினார்.
Next Story

