கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

X
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 12.09.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உத்தண்டு முருகன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story

