ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யக்கோரி காங்கிரசாத் ஆர்ப்பாட்டம்

X
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச முயன்ற சம்பவத்தை கண்டித்தும், கேரளாவில் 24 வயது இளைஞர் பலியான சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் நாகல் நகர் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்து பேசினார். மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் ஜின்சாத், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அக்னி ராஜ், மாணவர் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் முகமது ஹாரூன் ரஷீத், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் முகமது நவ்ஃபுல் உள்ளிட்ட மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

