திருக்காம்புலியூர் - டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து .முதியவர் படுகாயம்.
திருக்காம்புலியூர் - டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து .முதியவர் படுகாயம். கரூர் செங்குந்தபுரம் 3-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் வடிவவேலு வயது 65. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:35 மணி அளவில் கரூர் - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் திருக்காம்புலியூர் அருகே சென்றபோது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த லாரி வடிவேலு ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் பலத்த காயமடைந்த வடிவேலுவை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த வடிவேலுவின் உறவினர் செந்தில்ராசு வயது 60 என்பவர் அளித்த புகாரில் கரூர் மாநகர காவல் துறையினர் விபத்து ஏற்படும் வகையில் லாரியை ஒட்டிய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




