குற்றாலநாதா் கோயிலில் நடராசமூா்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

X
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி விஷு திருவிழாவில், அருள்மிகு நடராசமூா்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இக்கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா, கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு கோயில் உள்பிரகாரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவில்12ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 13ஆம் தேதி காலை 5.40 மணிக்கு விநாயகா், முருகன், திருக்குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்பாள் கேடயத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. 15ஆம் தேதி காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு கோயில் மணிமண்டபத்தில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மணிமண்டபத்தில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, உள்பிரகாரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.
Next Story

