தும்பைபட்டியில் பிரதோஷ வழிபாடு.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத, தேய்பிறை சனிமகா பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், நல்ல மழை பெய்து, விவசாயம் செழித்தோங்கவும், நோய் தொற்றுகளிலிருந்து மக்கள் நலமுடன் வாழவும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமியும் , நந்தியம் பெருமாளும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சங்கு நாதம் முழங்க, தீப ஆராதனைகளுடன் திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இன்றைய இறைப் பணியை மதுரை யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சிவ.ராமர்- சிவ.தவமணி, குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், சிவன் 108 போற்றி, பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு, சாம்பார் சாதம், அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், திருக்கோயில் அர்ச்சகர் சிவ.பா.ராஜேஷ் கண்ணன், ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story



