மழைநீர் வெளியேற்றப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு

X
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மழைநீர் வெளியேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.10.2025) நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி சி. ப்ரியங்கா, இ.ஆ.ப., மற்றும் அரசு துறைச்சார்ந்த பல அலுவலர்கள் இணைந்திருந்தனர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் துரிதமாக நீரை அகற்றி பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Next Story

