அம்மா சாலையில் டூவீலரில் செல்லும்போது குதிரை குறுக்கே வந்ததால் விபத்து.

அம்மா சாலையில் டூவீலரில் செல்லும்போது குதிரை குறுக்கே வந்ததால் விபத்து.
அம்மா சாலையில் டூவீலரில் செல்லும்போது குதிரை குறுக்கே வந்ததால் விபத்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் ஆனந்த் வயது 43. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7:40 மணியளவில் திருக்காம்புலியூர்- குளத்துப்பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்பகுதியில் உள்ள அம்மா சாலையில் குளத்துப்பாளையம் சுரங்கப்பாதை அருகே சென்ற போது திடீரென குதிரை ஒன்று சாலையை கடந்து சென்றதால் நிலை தடுமாறிய அருள் ஆனந் தனது வாகனத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் அவருக்கு பின்னந் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த அருள் ஆனந்த் உடன் பிறந்த சகோதரர் நாச்சியப்பன் வயது 46 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் மாநகர காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story