தாந்தோணி மலை நியாய விலை கடையில் பணியாற்றிய ஊழியரை அடையாளம் தெரியாத பூச்சி கடித்து உயிர் இழப்பு.

தாந்தோணி மலை நியாய விலை கடையில் பணியாற்றிய ஊழியரை அடையாளம் தெரியாத பூச்சி கடித்து உயிர் இழப்பு.
தாந்தோணி மலை நியாய விலை கடையில் பணியாற்றிய ஊழியரை அடையாளம் தெரியாத பூச்சி கடித்து உயிர் இழப்பு. கரூர் ஆண்டாங் கோவில் கிழக்கு அமராவதி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் வயது 37. இவர் கரூர் தாந்தோணிமலை பகுதியில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் இவர் பணியில் இருந்த போது அந்த கடையில் ஏதோ அடையாளம் தெரியாத பூச்சி ஒன்று பிரபாகரனை கடித்துவிட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பிரபாகரனின் மனைவி போதும் பொண்ணு வயது 32 என்பவர் அளித்த புகாரில் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story