கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணை வழங்கும் விழா

கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணை வழங்கும் விழா
X
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் அமைச்சுப் பணி அலுவலர் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணை வழங்கும் விழா
தூத்துக்குடி மாவட்டம், 21.10.2025: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணம் அடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) / வரவேற்பாளர் (Receptionist) மற்றும் அலுவலக உதவியாளர் பணியாணைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பணியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதே நாளில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து, மாநிலம் முழுவதும் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறை மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாநிலம் முழுவதும் மொத்தம் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, இந்நிகழ்ச்சி அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்வில், காவல்துறை அதிகாரிகள், அமைச்சுப் பணி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணி நியமன ஆணை பெற்ற வாரிசுதாரர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி தலைமையிடத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், நிர்வாக அலுவலர் திரு. ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர் திரு. மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story