கோவையில் கனமழை : நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களும் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக குனியமுத்தூர் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு நிரம்பி, தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் உள்ளது.
Next Story



