பவித்திரம் அருகே டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

பவித்திரம் அருகே டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
பவித்திரம் அருகே டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா தும்பிவாடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் வயது 70. இவர் செவ்வாய்க்கிழமை அன்று காலை 7- மணி அளவில் கோவை -கரூர் சாலையில் அவரது டூவீலரில் பவித்திரம் பகுதியில் செயல்படும் ஐஓபி வங்கி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் மதுரை மாவட்டம் தல்லாகுளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் சுந்தரமூர்த்தி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த சுந்தரத்திற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுந்தரம் அளித்த புகாரில் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய இளவரசன் மீது க.பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story