கணக்குப்பிள்ளைத் தூர் அருகே டூவீலரில் வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.
கணக்குப்பிள்ளைத் தூர் அருகே டூவீலரில் வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் வயது 52. மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் ஒருவருடன் திங்கட்கிழமை அன்று திண்டுக்கல்-கரூர் சாலையில் டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் அரவக்குறிச்சி தாலுக்கா கணக்குப் பிள்ளைதூர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பு அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரை ஓட்டிய செல்வத்தின் உறவினருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வத்தின் உறவினர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாலைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் வயது 59 என்பவர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
Next Story





