மாயனூர் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

மாயனூர் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மாயனூர் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மாயனூர் அருகே சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் வயது 48. இவர் திங்கட்கிழமை அன்று மதியம் 2:10 மணியளவில் கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மாயனூர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, கோவை மாவட்டம் ஒத்தக்கல் மண்டபம் பிரிமியர் நகர் பாலாஜி கார்டன் பகுதியைச் சேர்ந்த விஜய் வயது 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் விஜயகுமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜயகுமாருக்கு தலை முகம் வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த விஜயகுமாரின் மாமியார் கலாவதி வயது 55 என்பவர் அளித்த புகாரில் காரை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விஜய் மீது மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story