கோவை: புறநகர் பகுதிகளில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி !

X
கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை, பூலுவபட்டி, விராலியூர், நரசிபுரம், வடவள்ளி, தடாகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோவை மக்களின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 37.82 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 44.61 அடி வரை நீர் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

