அதிக விலைக்கு அரசு மது விற்ற நபர் கைது

X
Komarapalayam King 24x7 |24 Oct 2025 9:41 PM ISTகுமாரபாளையத்தில் அதிக விலைக்கு அரசு மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்
குமாரபாளையத்தில் அரசு மது பானங்களை அதிக விலைக்கு மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, உள்பட போலீசார் பலரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஆனங்கூர் சாலை, கல்லங்காட்டுவலசு பகுதியில், பெண் ஒருவர் அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டு இருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் மளிகை கடை வைத்திருக்கும் வளர்மதி, 42, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story
