தேன்கனிக்கோட்டை அருகே சுற்றி திரியும் குட்டி யானையால் பரபரப்பு.

X
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள மாரசந்திரம் பகுதீயில் உள்ள தனியார் பள்ளி அருகில் நேற்று தாயிடம் இருந்து பிரிந்த 4 வயதுடைய குட்டி யானை சுற்றி திரிந்து வந்தது. குட்டி யானையை பார்த்ததும் பள்ளி வாகனத்தில் வந்த பள்ளி சிறுவர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அந்த குட்டி யானையை அருகில் இருந்தவர்கள் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். குட்டி யானையை பார்க்க வந்த கிராம மக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
Next Story

