கெலமங்கலம்: காதல் ஜோடி விஷம் குடித்தனர்- கல்லூரி மாணவி உயிரிழப்பு.

X
தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் அருகேயுள்ள பென்னாகரம் சாலை யில் மேட்டுத்தெரு ஓட்டுனர் நகர் பகுதியை சேர்ந்த (17) வயது சிறுமி இவர் தர்மபுரியில் தனியார் கல்லுாரியில் பி.காம். முதலம் ஆண்டு படித்து வந்தார். இவரும் இதே கல்லுாரியில் படிக் கும் சக மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கு தெரிந்ததால் சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என நினைத்து கொலமங்கலம் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி அணைக்கு மேலே உள்ள முனியப்பன் கோயில் அருகில் 2 பேரும் விஷம் குடித்தனர். பின்னர் அவர்களே ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். சம்பவ இடதிற்ககு வந்த ஆம்புலன் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்தியா சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். காதலனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

