குருபரப்பள்ளி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள நெடுமருதி பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (70) இவருக்கு நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணம் அடைய வில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வேணுகோபால் உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

