சப் இன்ஸ்பெக்டர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை!

X
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைதானேந்தல் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் இவர் தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (48), இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பரமேஸ்வரி இன்று காலை தனது வீட்டில் படுக்கை அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

