கொளந்தானூர் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.
கொளந்தானூர் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகே கருப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 74. இவர் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் தெரசா கார்னரில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள கொளந்தானூர் கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று நடந்து சென்ற ராமசாமி மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் மனைவி பெரியம்மாள் வயது 65 என்பவர் அளித்த புகாரில் தாந்தோனி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story




