லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுனர் படுகாயம்

லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுனர் படுகாயம்
X
குமாரபாளையம் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தார். கோவை மதுக்கரை பகுதியில் வசிப்பவர் குமார், 27. லாரி ஓட்டுனர். நேற்றுமுன்தினம் மாலை 05:30 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பகுதியில் தனது ஈச்சர் எனும் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரி ஓட்டுனர், தாறுமாறாக ஓட்டி, திடீரென்று, வேகத்தை குறைத்தார். இதனால் நிலைதடுமாறி, லாரியின் பின்புறம் மோதியதில், இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முன்னால் சென்ற லாரி நிற்காமல் சென்று விட்டது. இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரி குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story