தாலுக்கா வளாகத்தில் பனைவிதை நடுதல்

குமாரபாளையம் தாலுக்கா வளாகத்தில் பனைவிதை நடுநடுதல் நிகழ்வு நடந்தது.
தமிழ்நாடு அரசின் ஆறு கோடி பனை விதைகள் நடும் பணியில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தளிர்விடும் பாரதம் சார்பாக குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் குமாரபாளையம் *தாலுகா துணை தாசில்தார் செல்வராஜ், வி.ஏ.அரசு, குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கவிதா, சமூக ஆர்வலர் சித்ரா ஆகியோர் பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி, ஆசிரியைகள் ஜாய்ஸ் அருள் செல்வி, ராணி, பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Next Story