புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி!
வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கடந்த 21-ம் தேதி முதல் மீமிசல், கோட்டைப்பட்டினம், கட்டுமாவடி ஆகிய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (அக்.,29) முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இன்று அதிகாலை முதல் படகுகளை தூய்மைப்படுத்தி வலைகளுடன் ஏராளமான மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
Next Story



