காவிரி தாய்க்கு தீபாராதனை

காவிரி தாய்க்கு தீபாராதனை
X
குமாரபாளையத்தில் காவிரி தாய்க்கு தீபாராதனை நடத்தப்பட்டது.
தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை, காவிரி நீர் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும், காவிரி நீரை தூய்மையாக வைத்திருக்க உதவ கேட்டுக்கொள்ளவும் வேண்டி காவிரி பாதுகாப்பு குழு, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரித் தாய் விக்கிரக ரத யாத்திரை நடத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் வருகை தந்த காவிரித் தாய்க்கு தீபாராதணை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. காவிரியை தூய்மையாக வைத்திருக்க வேண்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், வெங்கடாசலம் உள்பட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
Next Story