தமிழ்நாடு சோட்டாகான் அகாடமி சார்பில் புதன் சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பட்டயத் தேர்வு..

X
Rasipuram King 24x7 |7 Nov 2025 6:51 PM ISTதமிழ்நாடு சோட்டாகான் அகாடமி சார்பில் புதன் சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பட்டயத் தேர்வு..
நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டாகான் அகாடமி சார்பாக கராத்தே பட்டயத் தேர்வு நடைபெற்றது. ஸ்ரீ சக்தி மெட்ரிக் பள்ளியை சார்ந்த சுமார் 88 மாணவர்கள் கட்டா, கும்மிட்டி, உதைத்தல், குத்துதல் உள்ளிட்ட கராத்தே செயல்பாடுகளை செய்து காண்பித்தனர். தமிழ்நாடு சோட்டாகான் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் V. சரவணன், அவர்கள் தேர்வு நடத்தினார், பள்ளியின் பயிற்சியாளர் K.பிரபு அவர்கள் உடன் இருந்தார். பள்ளியின் முதல்வர் திருமதி.V. சித்ரா பழனியப்பன் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் அடுத்தபடி நிலைக்கு உண்டான பெல்ட்டையும் வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் பள்ளியின் தலைவர் V.மணி (எ) வெங்கடாசலம், செயலாளர் K.துரைசாமி மற்றும் தாளாளர் C.ராஜு ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story
