திருச்செங்கோடு மாரியம்மன் திருவிழா இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திருச்செங்கோட்டில் மாரியம்மன் திருவிழாவை ஒட்டி பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் அழகு முத்து மாரியம்மன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாரியம்மன் கோவிலில்களில் இருந்து ஈரோடு ரோட்டில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம்
திருச்செங்கோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஸ்ரீ சின்ன மாரியம்மன் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோவில்களில் மாரியம்மன் திருவிழா கடந்த 28ஆம் தேதி பூச்சாட்டுதளுடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்தும்,அழகு முத்து மாரியம்மன் கோவிலில் இருந்தும் கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஒரே இடத்தில் சேர்ந்து தெற்கு ரதவீதி  ஈரோடு ரோடு வழியாக ஊர்வலமாக வந்து ஈரோடு ரோட்டில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பங்கள் விடப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று கம்பத்திற்கு உப்பு மிளகு இரைத்தனர். கம்பத்தின் முன் அம்மன் வேடமணிந்த பக்தர்கள் மற்றும் பல்வேறு கடவுள் வேடமணிந்த பக்தர்கள் நடனமாடியபடி வந்தனர் கம்பம் விடும் நிகழ்வை ஒட்டி பெரிய தெப்பக்குளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கம்பத்துடன் வந்த ஒரு சிலரைத் தவிர யாரும் தெப்பக் குளக்கரைக்கு அனுமதிக்கப் படவில்லை. குளக்கரையை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று கம்பம் விடும் நிகழ்ச்சியை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில்உள்ள மாரியம்மன் கோவில்களில் இருந்தும் கம்பங்களும் கும்பங்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தெப்பக்குளத்தில் விடப்பட்டது.கம்பம் விடும் நிகழ்வை ஒட்டி ஈரோடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டிருந்தது.
Next Story